Thursday, June 25, 2015

தமிழர்கள் இந்துத்துவத்துக்கு போனால் என்ன ஆகும்?

தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாடு - இதில் பள்ளர் சாதி தலைவர்களும் நாடார் சாதி சங்கத் தலைவர் ஒருவரும் இருந்தனர்.

கொங்கு வேளாளர் சாதி அமைப்பைச் சேர்ந்த கொங்கு ஈஸ்வரன் இராமதாசும் திருமாவளவனும் இந்து என்பதால் சாதி ஒழிப்பா(?)ளர்கள் அவர்களைப் பிரித்துவிட்டார்கள் என்று வகையாக தமிழர்களுக்கு வரும் எதிர்ப்பை இந்து எதிர்ப்பாக திரித்து விடுகிறார்.

ஏன்யா ஈஸ்வரரே. உங்க திசைத் திருப்பல் தமிழர் ஒற்றுமையில் எந்த விதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்குக் காசு கொடுத்துப் பேசச் சொன்ன இந்துத்துவ அமைப்புக்காரன் சொல்லிருக்க மாட்டான். அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என எனக்குத் தெரிந்தளவில் கொஞ்சம் சொல்கிறேன். பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

1. இந்து மதத்திலுள்ள அத்தனைச் சாதிகளும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று வடுகர்கள் நினைப்பதாக ஈஸ்வரன் சொல்கிறார். அப்போ இந்து மதத்தைத் தவிர உள்ள பிற தமிழக மக்கள் பின்பற்றும் மதங்களில் சாதி இல்லையா?

கிறுத்துவர்களில் நாடார், பறையர், முக்குலத்தோர், பரவர் என சாதிகள் அப்படியே தானே உள்ளன.

இசுலாமியர்களில் உள்ள பிரிவுகளுக்காக தனி ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்படுத்தி அதில் 7 இசுலாமிய சாதிகளை அரசு அடக்கவில்லையா?

மேல் கொடுத்த இரண்டு மதங்களிலும் தமிழர்கள் இல்லையா? அந்த தமிழர்கள் தங்கள் சாதியை மறந்து தமிழ் கிறித்துவராக/தமிழ் இசுலாமியராக ஒன்றுபட்டு நின்றனரா?

இப்படிப் பேசினால் தமிழ் கிறுத்துவர்களும் தமிழ் இசுலாமியரும் தமிழ் இந்துக்களுக்கு எதிராக நிலை அல்லவா எடுப்பார்கள்?

மொத்தத்தில் இராமதாசு-திருமாவளவன் பிரிவு தமிழர்களின் பிரிவா? இந்துக்களின் பிரிவா?

இந்துத்துவா காசு கொடுக்குறாங்குறதுக்காக எந்த மாதிரின்னாலும் கதை கட்டுவார் போல ஈசுவரன். அவர் பேசிய காணொளியின் இணைப்பு கீழே.

___________
தமிழர் தரப்பில் ஒரு எடுத்துக்காட்டு - கொங்குத் தலைவர்கள் - கொங்கு ஈஸ்வரன், மணிகண்டன்
10:20 "சாதிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது. இந்து சமயத்திலுள்ள சாதிகள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்று கண்கணம் கட்டிக்கொண்டு இன்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக. இந்து மதத்திலுள்ள அத்தனைச் சாதிகளும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் பல பேருக்கு இருக்கிறது." 10:35
https://www.youtube.com/watch?v=KDALhBYNRDk
_____

இது இப்படி இருக்க இந்துத்துவத்துக்கு பலியாகும் சாதி அமைப்புகளை எதிர்க்கிறேன் பேர்வழின்னுட்டு நம்ம கருநீலச் சட்டைகள் மற்றொரு சமயமான பௌத்தத்தைக் காட்டி இன்னும் தமிழர்களை கூறுபோடுகிறார்கள்.
வடுகநலன் சார்ந்த திராவிட இயக்கக் கருப்புச் சட்டை ஒருபக்கம் நிற்க மறுபுறம் திடீர் திராவிடர்களான நீலச்சட்டைகளில் ஒருவர் பேசுகிறார். அதன் காணொளிகள் கீழே.
____________
வடுகர் தரப்பு

"நாங்கெல்லாம் என்னைக்குடா இந்துன்னு சொன்னோம். எங்க மாரியம்மன் கோயிலு. மதுரைவீரன் கோயிலுக்கு நீ வந்துருக்கயா? எங்க சாமி சாராயம் குடிப்பாரு மாட்டுக்கறி சாப்டுவாரு. உங்க சாமியும் எங்க சாமியும் ஒண்ணா? நாங்கெல்லாம் பூர்விக பௌத்தர்கள். ஆரியத்தை இன்று வரைக்கும் வீரியமாக பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்."
https://www.youtube.com/watch?v=oEoCRVBQz34

0: 55 "கோயமுத்தூர்ல எவனோ ஒரு அயோக்கியன் மணிகண்டன்னு திரிஞ்சிக்கிட்டுருக்கானாம். ஒரு நாய். அந்த நாய் பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போய் சொல்றானாம். எல்லா ஸ்கூலுக்கும் போயிட்டு கலப்புத் திருமணம் கூடாது." 1:05
https://www.youtube.com/watch?v=p6moEWc53eY

____________

சரி இதனால் புரிந்த விடயங்கள் யாவை?
1. தமிழர்களுக்குள் வடுகப்பிராமணியம் பிரிவை ஏற்படுத்துவதை, இந்துக்களுக்கு உள்ள பிரிவாக காசு வாங்கிக் கொண்டு திரித்துக் காட்டுவதன் மூலம் தமிழர்களில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிராக கிறித்துவ இசுலாமைய சமயத்தை பின்பற்றும் தமிழர்களை மறைமுகமாக திருப்புகிறது ஈஸ்வரனின் உரை.
2. தமிழர்கள் ஒன்றுபட்டு நிக்கனும் எனச் சொல்வதை விட்டுவிட்டு இராமதாசு-வளவன் பிரிவை இந்துக்களின் பிரிவாக காட்டுவதன் மூலம் வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்துக்கு வரும் ஆதரவை திறமையாக இந்துத்துவம் தனது மதவாதக் கருத்தியலுக்கு ஆதரவாக திருப்பிக் கொள்கிறது.
3. இந்த இந்துத்துவவாதிகளை எதிர்க்கிறோம் பேர்வழிங்குற பேரில் மாரியம்மனை எல்லாம் பூர்விக (?) பௌத்தத்துக்கு இழுக்கிறார் ஆதிஆந்திரர் ஒருவர்.
4. இதனால் தலித்தியத்தில் இருந்து தமிழ்த்தேசியத்துக்கு வர நினைக்கும் தமிழர்களை குழப்பி மீண்டும் தலித்தியத்துக்கே வரவழைக்கிறார் ஆதி ஆந்திரர். அதுக்கு கொங்கு ஈஸவரனின் பேச்சும் மறைமுகமாக இந்துத்துவப் பூசாண்டிக் காட்டி தமிழ்த்தேசியத்துக்கு வர நினைப்பவர்களை தலித்தியத்துக்கு தள்ளுகிறது.
____________

இதனால் வடுகப்பிராமணியத்துக்கு சாதகங்கள் யாவை?
இதனால் வடுகப்பிராமணியத்துக்கு ஏற்படும் சாதக விளைவுகளைக் காணலாம்.
1. தமிழர்களை தமிழ் இந்துக்கள், தமிழ் இசுலாமியர்கள், தமிழ் கிறுத்துவர், தமிழ் பௌத்தர் எனக் கூறுபோடுகின்றன இந்த்துத்துவமும். தலித்தியர்களின் பௌத்தமும்.
2. தமிழர்களுக்கு அந்நியமான சமயங்களான இந்துத்துவம், பௌத்தத்துக்கு தமிழர்களை இழுத்துச் செல்கின்றன இந்தப்பேச்சுக்கள்.
3. தமிழர்களின் அறிவியல் நெறியும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் சேர்ந்த சமயநெறியான பூதவாதம் காட்டாத எதிர்ப்பையா பௌத்தம் காட்டிவிட்டது? குறிப்பாக மகாயாண பௌத்தத்திலும் திரமில சங்க ஜைனத்திலும் வடுகர்களும் பிராமணர்களும் புகுந்து செய்த திரிபு தாளங்களை மறைத்துவிட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமயமாக பௌத்தத்தை காட்டுகின்றன இப்பேச்சுக்கள்.
4. பூர்விக (?) பௌத்தர்களாம். பௌத்த இலக்கியங்கள் முதலில் வடமொழியான பாலியில் அல்லவா எழுதப்பட்டன? பின்னர் எப்படி தமிழர்கள் எப்படி பூர்விக பௌத்தராக முடியும்? இதனால் புறச்சமயங்கள் வந்த பிறகே தமிழனுக்கு விடிவு கிடைப்பதாக தலித்திய கருத்தியலைப் பின்பற்றும் தமிழர்களை திசை திருப்பும் திராவிட/தலித்திய அமைப்புகள்.

ஆக முடிவில் தமிழர்களுக்கும் தமிழக்கும் தமிழர் சமயங்களான தென்புலத்தோர் வழிபாடு தமிழரின் அறிவியல் நெறியான பூதவாதம் போன்றவற்றுக்கு எந்த பயனும் இல்லை.

இந்தப் பேச்சுக்களால் வடவர்களும் வடுகர்களும் இந்துத்துவத்தின் மூலமும், வடுகர்களும் ஆதி ஆந்திரர்களும் தலித்திய பௌத்தத்தின் மூலமும் தங்களை பலப்படுத்திக்கொண்டு மேலும் தமிழர்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணவே செய்வர்.

இதே கொங்கு அமைப்புகளின் தலைவர்கள் இராமதாசு-வளவன் பிரிவை தமிழர்களுக்குள் வடுகர்களும் பிராமணியர்களும் ஏற்படுத்தும் பிரிவாக உண்மையைக் காட்டியிருந்தால் சிக்கலே இருந்திருக்காது. அடுத்து பேச வந்த பள்ளர், நாடார் தலைவர்களாவது இதை சொல்லியிருக்கலாம்.

இனி இந்துத்துவத்தின் மூலம் பி.ஜே.பியும் வடுக இந்து அமைப்புகளும் தமிழர்களின் அனைத்து சாதி அமைப்புகளிலும் கணமாக தன் கால்களை வைக்கும்.

அதே போலவே ஆதி ஆந்திரமும் தலித்திய பௌத்தத்தின் மூலம் தன் கால்களை தலித்தியத்தை பின்பற்றும் தமிழர்களின் மனதிலும் அழுத்தி வைக்கும்.

இரண்டு திருடர்களும் வளர தமிழர் தங்களுக்குள் சாதி மத கருத்தியல் சண்டைகளால் சீர்கெட்டு அழிவர். சரி இதை தமிழ்த்தேசிய தமிழர்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம்?

தீர்வுகளை முன்வையுங்கள். நானும் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன்.

Wednesday, June 24, 2015

சங்கத மொழிக்கு மட்டும் ஏன் கோயிலில் எதிர்ப்பு?

இந்துத்துவ வெறியர்களும் அதனால் வீழ்த்தப்பட்ட மூடர்களும் வழக்கமாக வைக்கின்ற கேள்வி இது. மசூதிகளில் அரபி, உருதுவில் தொழுகிறார்கள். தேவாலயங்களில் ஆங்கிலத்தில் வழிபடுகிறார்கள். அதை எல்லாம் எதிர்க்காமல் ஏன் தமிழ்த்தேசியவாதிகள் (போலித் தேசியர்களான வடுகத் திராவிடக் கோமாளிகள் அல்ல) ஏன் சங்கதத்தை மட்டும் கோயிலில் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?

இந்த கேள்வியில் உள்ளது இந்துத்துவ வெறியே. இசுலாம் தோற்றம் பெற்றதும் கிறித்துவம் தோற்றம் பெற்றதும் அரேபிய ஐரோப்பிய பகுதிகளில். ஆனால் தமிழரின் ஐந்திணைக் கடவுள்களைப் பெருமளவில் களவாடி மற்ற பழங்குடிகளின் பழங்கதைகளை அங்கங்கே பிச்சுப் போட்டு ஒரு கூட்டு மதத்தை உருவாக்கி வைத்துவிட்டு அதுக்கு சங்கத மொழியில் தான் வழிபடுவேன் என்றால் எப்படி?

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டிற்கும் இறைவா போற்றி. போன்ற ஏராளமான சொலவடைகளும் பழமொழிகளும் தமிழில் உண்டு. அதனால் தற்போது ஜோடிக்கப்பட்டுள்ள இந்து என்னும் கூட்டு மதத்துக்கு செத்த மொழியை போய் சமய்மொழியாய் வைத்தால் இது சமயவாதிகளின் கூட சரியல்லவே.

பின்னர் தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கத் தான் செய்வார்கள்.

தமிழ்த்தேசியர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு எந்த மதத்தின் கோயிலானாலும் தமிழில் தான் வழிபடனும். வேண்டுமானால் தமிழர் கோயில்களிலும் தமிழர் மசூதிகளிலும் தமிழர் தேவாலயங்களிலும் இயல்பான வழிபடு மொழியாய் தமிழை வைத்துவிட்டு வெளியே பின்வருவது போல் பலகை வைத்துவிடலாம்.

செத்த மொழியில் மணியாட்டனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
அரபி/உருதில் உளறனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
ஆங்கிலத்தில் ஏசப்பாவை ஏலம் விடனும் என்றால்  ஒருவருக்கு 10,000 ரூபாய்.

தமிழ் என்றால் வந்தவர்கள் எல்லாம் வழிபடலாம்.

இதெப்படி இருக்கு.